வெள்ளி, 2 டிசம்பர், 2011

en natpukkaga


 

நான் ரசித்த -கவிஞர் அறிவுமதி கவிதைகள்

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை ....

*******

நீ வயசுக்கு வந்தபோது
தடுமாறிய
என்
முதல் கூச்சத்திற்குக்
குட்டு வைத்து
நம் நட்பைக்
காப்பாற்றியவள்
நீ

*******

அம்மா அப்பாவிடம் அறிமுகப்படுத்த
முதன்முதலாக என்னை நீ
உனது வீட்டிற்கு அழைத்துச்
சென்றிருந்த போது
வழக்கமான அம்மாக்களின்
சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு
நடுவே....
''எப்போதும் இவன் உன்
மருமகனாக முடியாது
ஏனெனில்
இவன் என்
நிச்சயிக்கப்பட்ட நண்பன்''
உன் குரல்
இப்போதும் கேட்கிறது
எனக்குள்

*******

தொடாமல் பேசுவது
காதலுக்கு நல்லது.
தொட்டுப் பேசுவதுதான்
நட்புக்கு நல்லது.
தொடுதலின் வழியே
கசியும் அர்த்தங்களை
எந்த மொழி
பேசிவிடும்

*******

என் காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து வைத்தபோது
நீ விழுங்கிய
எச்சிலில் இருந்தது
நமக்கான நட்பு

*******

பால் வாசனையில்
அம்மா
அக்குள்
வாசனையில்
துணைவி
இதயத்தின்
வாசனையில்
நட்பு

*******

நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காக்கள் உள்ளவரை
வாழ்க்கை
அநாகரிகமானதுதான்

*******

கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்

*******

என் கணவரும்
உன் துணைவியும்
கேட்கும்படி
நம்
பழைய மடல்களையெல்லாம்
படித்துப் பார்க்க
ஒரு
மழை தொடங்கும்
நாள் வேண்டும்
 
&&&&&&&&&&&&
 
நண்பர்கள் என்றவர்கள்
காதலர்களாகியிருக்கிறார்கள்
எனக்குத் தெரிய அண்ணன் தங்கை என்று ஆரம்பித்தவர்களே
கணவன் மனைவியாகவும் ஆகியிருக்கிறார்கள்
ஆனாலும் சொல்கிறேன்
நட்பு என்பது நம்மைப்போல் என்றும்
நட்பாகவே இருப்பதுதான்
 
*********************
 

என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை ....


*******
அம்மா அப்பாவிடம் அறிமுகப்படுத்த
முதன்முதலாக என்னை நீ
உனது வீட்டிற்கு அழைத்துச்
சென்றிருந்த போது
வழக்கமான அம்மாக்களின்
சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு
நடுவே....
''எப்போதும் இவன் உன்
மருமகனாக முடியாது
ஏனெனில்
இவன் என்
நிச்சயிக்கப்பட்ட நண்பன்''
உன் குரல்
இப்போதும் கேட்கிறது
எனக்குள்

*******

தொடாமல் பேசுவது
காதலுக்கு நல்லது.
தொட்டுப் பேசுவதுதான்
நட்புக்கு நல்லது.
தொடுதலின் வழியே
கசியும் அர்த்தங்களை
எந்த மொழி
பேசிவிடும்

*******

என் காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து வைத்தபோது
நீ விழுங்கிய
எச்சிலில் இருந்தது
நமக்கான நட்பு

*******

கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்

*******

en manathai varutiya kathal kavithaikal

ஊர் கூடும் வேளையில் உன்
கழுத்தில் நான் மாலை சூட
வேண்டும் என்று நினைத்தேன் .....

நீயோ ஊர் கூடி எனக்கு
மாலை சூட ஆசை படுகிறாய்....

நிஜமாக நீ நிருந்தால் உன்
நிழலாக நான் இருப்பேன் ...

எங்கிருந்தாலும் நீ நலமுடன்
வாழ்க .....

அதோ தெரிகிறது அன்பு  

அன்பின் திரிபுகளை எண்ணிக் கிடந்தான்,
பெருங் காய்ச்சல் கண்ட ஒரு நாளில்.
தன்னிடமே கேட்டான் வாழ்க்கை கேள்வி ஒன்று.

‘கலப்படம் இல்லா அன்பு எங்கே?'

மதிய உணவு வேளையும் வந்து போனது; விடை வரவில்லை.

ரொட்டித் துண்டை புறந்தள்ளி,
தானும் காய்ந்து கிடந்தது அங்கொன்று.
தாய்மை, நட்பு, பக்தி எல்லாம் கலந்து அவனையே பார்த்தபடி, அவனது நாய்.

விடை மட்டுமல்ல, கடவுளும் கிடைத்தார் அந்தக் கண்களில்.


வெள்ளி, 9 செப்டம்பர், 2011

என் பாடல்

en aasan

kodil irunthu purappata suravali kavingane
unpugal solla ennitam varthai illa
aagarathil thedi alagiren nan

namathu oru varalarrilum ithigasaththilum
itam pittiththu iruppathu un(ungalai)  pondra rasiganal